புதன், 7 ஜூலை, 2010

பாரத் பந்த் வெற்றிபெறவில்லை - கருணாநிதி அறிக்கை

செய்தி :

விலைவாசி உயர்வு என்ற கோஷம் அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. அப்படிப் பாதிக்காத அளவுக்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் பூதாகரமாக எதிர்பார்த்த வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம். கிலோ அரிசி ஒரு ரூபாய், மானிய விலையில் மளிகைப் பொருள்கள், பஸ் கட்டண உயர்வில்லை போன்றவற்றின் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பு சாதாரண சாமான்ய மக்களிடம் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்து கந்தசாமி :

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க. முதல்வர் கருணாநிதி தமிழ் நாடு வறுமை இல்லாத மாநிலம் என்று அறிவித்து விட்டார். அரிசி ரூ.1, மானிய விலையில் மளிகை சாமான் என்பதெல்லாம் சரிதான். சமையல் எரிவாயு ரூ.35 ஏறியுள்ளது. மானிய விலை அரிசிசையும், மளிகை சாமான்களையும் வாங்கி அப்படியே சாப்பிட சொல்கிறாரா? ஒன்றும் விளங்கலையே இந்தக் கருத்துக்கு!!!

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக