மாமனார் - மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இத்தகைய காட்சிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இயக்குநர் சாமிக்கு எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக சில நாள்களாக தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றார் சாமி.
இந் நிலையில் கே.கே. நகர் நியு பங்காரு தெருவில் உள்ள அவரது வீட்டின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சில நாள்களாக வந்து கொண்டிருந்த மிரட்டல்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக சாமி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் சாமி போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து கந்தசாமி: சினிமாவை ஓட வைக்கிறதுக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டியெல்லாம் தேவை தான்.
இயக்குநர் சாமிக்கு : அடுத்ததா மாமியார் ம்றுமகன் கள்ள உறவை பத்தி படமெடுக்கப் போறீங்களாமா?
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக