புதன், 8 செப்டம்பர், 2010

தமிழக அரசு பொய் சொல்கிறது

பிபிசி தமிழ் செய்தி: தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் கூறியுள்ளார்.

தீயணைப்புத் துறை இயக்குனரான டி.ஜி.பி. ஆர்.நடராஜ் என்பவரும், லத்திகா சரண் தனக்கும் இன்னும் வேறு சிலருக்கும் பணியில் இளையவர், எனவே அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க்க்கூடாது என வாதிட்டு தொடர்ந்த வழக்கினை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தமிழக அரசு தனது பதில் மனுவில், "மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்வு இருக்கவேண்டும் என்பது விதியில்லை" எனக் கூறியிருக்கிறது.

விஜயக்குமார் தனது பதில் மனுவில், மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தாலும், தன்னையும் சட்டம் ஒழுங்குப் பிரிவுத்தலைவர் நியமனத்திற்கு டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

"அப்பதவி கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிலையில் இருப்பவர்களுக்குரித்தான் பதவியாயிருந்தும் லிஜயகுமார் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் அவருக்குப் பணியாற்ற விருப்பமில்லை என்ற ரீதியில் தமிழக உள்துறை செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தவறானது. அவதூறானது" என விஜயகுமார் மேலும் கூறியிருக்கிறார்.

கருத்து கந்தசாமி: இதுக்கு நம்ம தானைத் தலைவர் கருணாநிதி விடுத்த பதில் அறிக்கை "ஜெயலலிதா அம்மையார் மாற்றி சொன்னதில்லையா, நண்பர் பாண்டியன் மாற்றி சொன்னதில்லையா, அத்வானி அவர்கள் மாற்றி சொன்னதில்லையா, அமெரிக்க அதிபர் மாற்றி சொன்னதில்லையா"

சிரிச்சுட்டு மாத்திக் குத்தாம சரியா வோட்டு குத்திட்டு போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக