வியாழன், 2 செப்டம்பர், 2010

மகள் திருமண அழைப்பு: ரசிகர்களிடம் ரஜினி வருத்தம்

தினமணி செய்தி: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்:

எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்து கந்தசாமி: விடுங்க ரஜினி சார். உங்களை பத்திதான் பாபா படம் வந்த பின்னாடி ஒரு கண்காட்சி நடத்துனீங்களே, அப்பவே ரசிகர்கள் தெரிஞ்சுக்கிட்டாங்களே. ரொம்ப கவலைப் படாதீங்க உங்க எந்திரன் படத்தை உங்க ரசிகர்கள் ஓட வைச்சிருவாங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக