இது என்பதால், இந்த நான்கு மொழி படங்களுக்கும் போட்டி வைத்து தேர்ந்தெடுப்பார்களாம். வெற்றி பெறுகிற படங்களுக்கு அவார்டு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளிவந்த நாடோடிகள், பசங்க, நான் கடவுள், காஞ்சிவரம் ஆகிய நான்கு படங்களும் போட்டியில் இருக்கின்றன. சிறந்த படங்களை மட்டுமல்ல, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று சினிமாவின் அத்தனை பிரிவினருக்கும் போட்டி வைத்து இந்த அவார்டு வழங்கப் போகிறார்களாம்.
இந்த போட்டி அறிவிப்பை வெளியிட வந்திருந்தார் குஷ்பு. அவருடன் சமந்தா, பியா போன்ற ஜிலு ஜிலு நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். முதலில் சவுத் ஸ்கோப் இதழ் பற்றி பேசிய குஷ்பு, ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்காகவும் யாரையும் காயப்படுத்தாமலும் இந்த இதழ்ல கிசுகிசு வருது. எப்பவுமே கிசுகிசு படிக்கறதுன்னா ரசிகர்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். அதை எல்லை மீறாம செஞ்சுட்டு வர்றாங்க இவங்க. இந்த போட்டியில் கலந்துக்கிற எல்லாருமே முக்கியமானவர்கள். எப்படிதான் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ? அல்லது ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ, குழப்பம்தான் என்றார்.
கருத்து கந்தசாமி: அடுத்தவங்களை பத்தின கிசுகிசுன்னா நம்மள காயப்படுத்தாதுதான்.
குஷ்புவுக்கு: மேடம், உங்க மேல இருந்த வழக்கு விசாரணையெல்லாம் முடிஞ்சிருச்சா?
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக