புதன், 18 ஆகஸ்ட், 2010

திருப்பதி கோயில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு

தினமணி செய்தி: திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஊழல் கண்காணிப்புத்துறை ஆந்திர அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப் படவில்லை. எனினும், பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதில் தேவஸ்தான நிர்வாகிகளின் உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே, திருப்பதி கோயில் நகைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கந்தசாமி:
இந்தியாவில் எங்கும் ஊழல் மயம்.
அரசாங்க அலுவலகத்தில் ஊழல்
அரசாங்க ஆஸ்பத்திரியில் ஊழல்
அரசாங்க வேலை வேண்டுமென்றால் ஊழல்
அதில் மாற்றல் வேண்டுமென்றால் ஊழல்
சுடுகாட்டு கொட்டகையில் ஊழல்
மின் வாரியத்தில் ஊழல்
அதிலே ஊழல்
இதிலே ஊழல்
அதிலே இது ஒரு ஊழல்


மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக