திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எங்களாலும் கீழே இறங்கிப் பேச முடியும்-ஜெ.வுக்கு எச்சரிக்கை விடும் குஷ்பு

தட்ஸ்தமிழ் செய்தி: ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாக சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல. கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை.

எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்விக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.

எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும். ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் கூட்டங்கள் நடத்தி பேசட்டும். நாங்கள் அவரது கூட்டங்களை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அவற்றை போட்டியாக எடுத்துக் கொள்வது இல்லை. எங்களுக்கு அந்த கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று பேசியுள்ளார் குஷ்பு.

கருத்து கந்தசாமி: குஷ்பூ தான் எந்தளவுக்கு இறங்கி பேசுவாருன்னு நமக்கெல்லாம் தெரியுமே. குஷ்பூ மேடம் கலைஞர் தொலைக்காட்சியில ஜாக்பாட் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போறீங்களாமே?

மறக்காம வோட்டுப் போடுங்க

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அது ஜாக்பாட் அல்ல....
"ஜாக்கெட் பாட்டு"

Unknown சொன்னது…

ஆகாய மனிதன் தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்கு உங்களுடைய கருத்து சூப்பர்

சீனிவாசன் சொன்னது…

தினம் ஒரு குரள்..ள மாத்தினா நல்லா இருக்கும்

கருத்துரையிடுக