புதன், 25 ஆகஸ்ட், 2010

போதை மருந்து பிரச்சினையில் எனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகிறது: நடிகை திரிஷா

நியூஇண்டியாநியூஸ் செய்தி: நடிகர், நடிகைகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் போதை பொருளை கடத்தி சப்ளை செய்த நைஜீரிய வாலிபரை ஆந்திர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் “கொகைன்” போதை பொருளை வாங்கிய தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் இரண்டு தம்பிகளும் கைதானார்கள்.

நைஜீரிய வாலிபர் செல்போனில் திரிஷா செல் நம்பர் இருந்ததாகவும், அவருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனை திரிஷா மறுத்தார்.

தன் மீதான அவதூறுகளை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதற்காக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருவதாகவும் விரைவில் கோர்ட்டுக்கு போவேன் என்றும் கூறினார்.

திரிஷாவின் நண்பரும் பேஷன் டிசைனருமான சிட்னி செல்டனுக்கும் போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா மறுத்தார். என் நண்பர் பெயரையும் தேவை இல்லாமல் இப்பிரச்சினையில் இழுக்கின்றனர் என்று வருத்தப்பட்டார்.

கருத்து கந்தசாமி: ரசிகர் அப்படின்னு சொல்லி செல் நம்பர் கேட்டிருப்பான். இவங்களும் ஆஹா, நமக்கு நைஜீரியாவுல கூட ரசிகர் இருக்காங்களான்னு புளகாங்கிதப் பட்டு செல் நம்பர் கொடுத்திருப்பாங்க. நம்ம திரையுலக மக்களோட பொது அறிவு தெரிஞ்ச விசயம் தானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

3 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

nallaave karuthu solringa

பனித்துளி சங்கர் சொன்னது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Unknown சொன்னது…

பனித்துளி சங்கர் அவர்களுக்கு சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நீங்கள் சொன்ன மாற்றத்தை செய்து விட்டேன்.

கருத்துரையிடுக