செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நடிகர் ஆர்யா மீது தயாரிப்பாளர் புகார்

விடுப்பு.காம் செய்தி: மதராசப்பட்டினம் பட வெற்றியின் உற்சாகத்தில் நடிகர் ஆர்யா உள்ளார். ஆனால் அவர் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் சிக்குபுக்கு. இதில் ஆர்யா, ஸ்ரேயா நடிக்கிறார்கள். மணிகண்டன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. இந் நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது.

அதில், ஆர்யா சிக்குபுக்கு படத்துக்கு, முறையாக டப்பிங் பேச வர மறுக்கிறார். இருமுறை அவருக்காக ரிக்கார்டிங் தியேட்டர் பதிவு செய்து வைத்திருந்தும் பேச வரவில்லை. இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்து கந்தசாமி: ஒரு படம் ஓடினதுக்கே இப்படியா. இன்னும் படமெல்லாம் நல்லா ஓட ஆரம்பிச்சா? வருங்கால முதல்வர் உருவாகி வருகிறார் போல.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக