செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

தட்ஸ்தமிழ் செய்தி: ஓசூரில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்கனாப்பள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மதன்மாறன் அப் பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பெண்களின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மதன்மாறனை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 8 பவுன் நகைகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்து கந்தசாமி: அவங்களுக்கு அரசாங்கம் சரியா சம்பளம் கொடுக்கறதில்லை. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சம்பள உயர்வு கொடுக்கறதில்லை. டியூசன் மூலமா சம்பாதிக்க முடியறதில்லை. வேலைக்கு போகாமலே கையெழுத்து மட்டும் போட்டுட்டு சம்பளம் வாங்க முடியறதில்லை. அப்படியே போனாலும் அங்கே சைடு பிஸினெஸ் செஞ்சு சம்பாதிக்க முடியறதில்லை. அதனால தான் வழிப்பறி செய்துள்ளார்.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக