திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

தட்ஸ் தமிழ் ஒன் இண்டியா செய்தி: காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும. உண்மை அல்ல என்று தெரியும் செய்திகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும் என இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரஹ்மான் பேசுகையில், காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான, மோசமான செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்று நான் நம்புகிறேன்.

நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்.

எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது.

கருத்து கந்தசாமி:
இசைப்புயல் இசையமைக்கிறத மட்டும்தான் கவனமா செய்வாரு போலிருக்குது. அறிவுரை சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லாமே மீடியாவ சொல்றாரு. அரசியல்வாதிங்க, அதிகாரிங்க என்ன பன்னினாலும் நாட்டு பேரு கெட்டு போயிருமின்னு விட்ரனுமாட்டம் இருக்குது. முதலே செத்துப்போனா அவங்களை விமர்சிக்க கூடாது, அவங்க நல்லவங்க ஆகிட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. இப்போ இசைப்புயல் புதுசா ஒன்னு எடுத்துக்கொடுத்திருக்காரு. வாழ்க இந்திய நாடு.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக